சாயாவனம் சாயவனேசுவரர் கோயில்
சாயாவனம் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே சாயாவனம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவு. திருவெண்காட்டில் இருந்து 3 கிமீ. ஆற்றுப்படை வழிநடத்திய 'கண்ணகியின் அடிச்சுவட்டில்' பயணத்தின்போது முதல் நாள் (29/04/2026) காலை கண்ட இடங்களில் ஒன்று. சாயாவனேசுவரர் கோயில் இறைவன்: சாயாவனேஸ்வரர், இரத்தினச் சாயாவனேஸ்வரர் - சுயம்பு லிங்கம். சதுர ஆவுடையார் இறைவி: குயிலினும் நன்மொழியம்மை / கோசகாம்பாள் தல மரம்: கோரைப் புல் (பைஞ்சாய்) தீர்த்தம்: காவிரி, ஐராவத தீர்த்தம் சாயாவனேஸ்வரர் கோயில் கோபுரம் அருகில் திருக்குளம் - ஐராவதத் தீர்த்தம் மூன்று நிலை கோபுரம். குடமுழுக்கிற்காக வேலைகள் (பழைய படம் நன்றி: TN Temples Project 12/2018) கோபுரத்தின் முன்புரம் - அமைதியான பரந்த வளாகம் கோபுரத்தின் வடக்கில் தலச் சிறப்புகள் தேவாரப் பாடல் பெற்ற தலம் வில்லேந்திய வேலவர் கோரைப்புல்லைத் தலமரமாகக் கொண்ட ஒரே தலம், 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் முக்தியடைந்த தலம். மாடக்கோயில் காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு காவிரிக...