குறுங்காலீஸ்வரர் கோயில், கோயம்பேடு, சென்னை
![]() |
| ஆறு நிலை ராஜகோபுரம். கோபுரம், மூலவர் கருவறை, அம்மன் கருவறை மூன்றுமே வடக்கு நோக்கியவை. வடக்கு தவத்துகுரியது. (தெற்கு - எம பயம் நீக்குவது, கிழக்கு - நன்மை பயப்பது, மேற்கு - செல்வம் தருவது) |
![]() |
| மேற்கண்ட கோபுரம் புதிதாகக் கட்டப்பட்டது. அதற்கு முன் இருந்த கல் தளமும், சிறிய கோபுரமும். (படம் நன்றி: https://temple.dinamalar.com/New.php?id=858) |
![]() |
| 2001 இல் வெளியிடப்பட்ட தல வரலாற்று நூல். இக்கோயில், பக்கத்தில் உள்ள வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் இரண்டையும் பற்றிய நூல். இக்கோயிலில் உள்ள 14 கல்வெட்டுகளைப் பற்றிய முழுமையான தகவல்களையும் தருவது சிறப்பு. இதைத் தமிழ் இணையக் கல்விக் கழக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்: கோயம்பேடு அருள்மிகு குறுங்காலீஸ்வரர், வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் தல வரலாறு.pdf |
![]() |
| ரிஷபம் சிறப்பு: மூக்கணாங்கயிறுடன் உள்ளது. |
![]() |
| சாமரமும் வெண்கொற்றக் குடையும் கொண்டு வெண்சாமர விநாயகர். அர்த்த மண்டபத்தின் வலதுபுறம் வழக்கமான இடத்தில். |
![]() |
கிழக்கு பார்த்த கருவறையில் இடது பக்கம் தெற்கு பார்த்து விநாயகருக்கு பக்கத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, இங்கு கருவறையின் பின்புறம் தெற்கு பார்த்து இருக்கிறார். (படம்: தமிழ் இணையக் கல்விக்கழகம்) |
![]() |
| வள்ளி - முருகர் - தெய்வானை இவ்வூரை அருணகிரிநாதர் பாடியுள்ளார். திருப்புகழில் இவ்வூரை 'கோசைநகர்' என்கிறார். (படம் நன்றி: https://temple.dinamalar.com/New.php?id=858) |
திருவொற்றியூர், திருமயிலை, திருவான்மியூர், கோயம்பேடு, திருவேற்காடு, திருலலிதாயம், திருமுல்லைவாயல் ஆகியவை அருணகிரிநாதரால் பாடப் பெற்றவை. இவற்றுள் கோயம்பேடு தவிர்த்த மற்ற தலங்கள் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள். எனவே, கோயம்பேடும் தேவாரப் பாடல் பெற்றிருக்க வாய்ப்புண்டு.
![]() |
| அறம் வளர்த்த நாயகி (தர்மஸம்வர்த்தினி) இறைவி சந்நிதி இறைவனின் வலப்புரம் இருப்பதும், அம்மையின் இடது திருவடி முன்னோக்கி இருப்பதும் சிறப்பு. |
"கோயம்பேடு என்ற ஊரும் இல்லை
குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை"
"வடக்கு பார்த்த சிவனும் இல்லை
மடக்கு போன்ற லிங்கமும் இல்லை"
என்பன வேறு எங்கும் இல்லாத சிறப்புகளைக் குறிக்கும்பழமொழிகள்.
கல்வெட்டுகள்
பல்லவர்கள், குலோத்துங்க சோழன், விஜயநகர மன்னர் ஆகியோர் ஆட்சி காலங்களில் இந்த கோவிலுக்கு மானியம் வழங்கப்பட்டு கோவில் திருப்பணி நடந்துள்ளது. அதற்கு சாட்சியாக 1 கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன.
மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 - 1218) 25 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 14 இக்கோயிலில் உள்ளன. “மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய” என்ற அவனது விருதுப்பெயருடன். எனவே, கோயில் குறைந்தது 800 ஆண்டுகள் பழமையானது எனலாம்.
ஒரு கல்வெட்டு, இதே ஊரைச் சேர்ந்த பேரையன் மகன் காளி ஆண்டான் என்ற திருஞானசம்பந்தன், கோயிலில் சந்திவிளக்கு எரிப்பதற்காகப் பசு ஒன்றையும் காசுகள் சிலவும் கொடையாகத் தந்துள்ளான் எனத் தெரிவிக்கிறது. கோயிலில் பூசைப்பணி புரிந்த சிவப்பிராமணர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு சந்திவிளக்கு எரிக்கும் அறச்செயலை இடையூறின்றிக் கதிரவனும், நிலவும் உள்ளவரை பொறுப்பேற்று நடத்துவதாக உறுதிமொழி அளித்துள்ளனர். அவ்வாறு பொறுப்பேற்ற சிவப் பிராமணர்கள் பலரது பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன.
கல்வெட்டுகள் மூலம் இங்கு ஒரு ஊர்சபை இருந்ததும் தெரிகிறது
![]() |
| பைரவர் |
![]() |
| வஜ்ராயுதம். சக்தி ஆயுதங்களோடு முருகர். திருநின்றீசர்?? |
![]() |
| மேலிரு படங்களுடன் ஒப்பிட்டு வேணுகோபாலன் படிமத்திற்கு ஸ்வஸ்திகாசனம் தரும் சமநிலையை, அழகைக் காண்க. |
![]() |
| சரபேஸ்வரர் தற்போது ஏற்றம் பெற்று வரும் இறை. |
![]() |
| திருமால் |
துணை










































































Comments
Post a Comment